இந்தியா

ஆந்திரா நவராத்திரி விழாக்களில் களைகட்டும் கரகாட்டம்

Published On 2023-10-20 06:49 GMT   |   Update On 2023-10-20 06:49 GMT
  • விஜயவாடாவில் உள்ள துர்கா கோவிலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
  • ஆந்திராவில் பழமைவாய்ந்த கரகாட்ட கலை நிகழ்ச்சி நவராத்திரி விழாக்களில் களைகட்டி உள்ளது.

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் தற்போது நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

விஜயவாடாவில் உள்ள துர்கா கோவிலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. நேற்று சாமி உற்சவத்தின் போது 15 பேர் கொண்ட ஆந்திர கரகாட்டகுழுவினர் நடனம் ஆடினர்.

சுமார் 100-க்கும் மேற்பட்ட கரகாட்டக் கலைஞர்கள் வரிசையாக நின்று நடனமாடினர்.

இது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது. இதே போல ஆந்திராவில் பழமைவாய்ந்த கரகாட்ட கலை நிகழ்ச்சி நவராத்திரி விழாக்களில் களைகட்டி உள்ளது.

Tags:    

Similar News