இந்தியா

குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி ரூ.1½ கோடி காணிக்கை

Published On 2022-09-18 09:31 IST   |   Update On 2022-09-18 09:31:00 IST
  • கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார்.
  • முகேஷ் அம்பானிக்கு கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்.

திருவனந்தபுரம்:

இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்.

பின்னர் அவர் கோவில் அதிகாரிகளிடம் அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

சாமி தரிசனம் முடிந்ததும் முகேஷ் அம்பானி கோவிலுக்கு காணிக்கையாக ரூ.1 கோடியே 51 லட்சத்திற்கு காசோலை வழங்கினார்.

முகேஷ் அம்பானி வழங்கிய காணிக்கை கோவில் அன்னதான திட்டத்திற்கு செலவிடப்படும் எனக்கூறப்படுகிறது.

Tags:    

Similar News