இந்தியா

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை நீதிமன்ற காவல்

Published On 2023-03-06 14:52 IST   |   Update On 2023-03-06 14:52:00 IST
  • ஊழல் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத்துறை கைது செய்தது.
  • மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் முடிந்த நிலையில் மார்ச் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) கைது செய்தது.

மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் முடிந்த நிலையில் மார்ச் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News