இந்தியா
பிரியாணி கடையில் புகுந்து தொல்லை: எலியை பிடித்து மோட்டார் சைக்கிள் ஏற்றி கொன்ற வாலிபர்
- பிரியாணி கடைக்குள் எலி அடிக்கடி புகுந்து அங்கிருந்த உணவு பொருட்களை தின்று நாசம் செய்து வந்துள்ளது.
- சிறிய உயிர்களிடத்தில் கூட இரக்கம் காட்டாத வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பயனர்கள் பலரும் பதிவிட்டனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டா நகரை சேர்ந்தவர் சைனுல். இவர் அப்பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்குள் எலி அடிக்கடி புகுந்து அங்கிருந்த உணவு பொருட்களை தின்று நாசம் செய்து வந்துள்ளது. இதனால் ஆவேசம் அடைந்த சைனுல் அந்த எலியை பிடித்து தனது மோட்டார் சைக்கிளுக்கு அடியில் வைத்து கொடூரமாக நசுக்கி கொன்றுள்ளார். இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அந்த வீடியோ வைரலாக பரவியது. அதனை பார்த்த பயனர்கள் பலரும் சிறிய உயிர்களிடத்தில் கூட இரக்கம் காட்டாத அந்த வாலிபருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.