இந்தியா

மகாராஷ்டிராவில் கொளுந்தியாள், 2 குழந்தைகளை எரித்து கொன்ற வாலிபர்

Published On 2023-04-06 13:12 IST   |   Update On 2023-04-06 13:12:00 IST
  • உறவுக்கார வாலிபர் ஒருவரே இளம்பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் தீவைத்து எரித்து கொன்றது தெரியவந்தது.
  • வாலிபர் மீது இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூனா:

மகாராஷ்டிரா மாநிலம் பூனாவை அடுத்த கோண்டேவாடா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கரும்புகை வந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

வீட்டிற்குள் இளம்பெண் ஒருவரும், அவரது 2 குழந்தைகளும் உடல் கருகி தீயில் இறந்து கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கோண்டேவாடா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து 3 பேரின் பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களை எரித்து கொன்றது யார்? என்பது பற்றி விசாரித்தனர்.

இதில் அவர்களின் உறவுக்கார வாலிபர் ஒருவரே இளம்பெண்ணையும், அவரது 2 குழந்தைகளையும் தீவைத்து எரித்து கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் 3 பேரையும் எரித்து கொன்ற வாலிபரை தேடினர். அவர் அந்த பகுதியில் உள்ள இன்னொரு வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்தனர். அவருக்கு 30 வயது இருக்கும். அந்த வாலிபரிடம் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் தீயில் இறந்து கிடந்த பெண், வாலிபரின் கொளுந்தியாள் என தெரியவந்தது. அவருக்கு அந்த பகுதியில் உள்ள சில வாலிபர்களுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த வாலிபர், கொளுந்தியாளை கண்டித்துள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து ஆண்களுடன் பழகி வந்துள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர் அந்த இளம்பெண்ணை தீவைத்து எரித்து கொன்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த பெண்ணின் குழந்தைகளையும் சேர்த்து தீவைத்து உள்ளார்.

இது தொடர்பாக போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News