இந்தியா
தொடர் கனமழை: திருவனந்தபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- கனமழை காரணமாக மக்கள் வெளியே செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
- அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, திருவனந்தபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியே செல்லமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று (4.10.2023) திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.