இந்தியா

இரட்டை கொலை வழக்கில் முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை

Published On 2023-09-01 09:38 GMT   |   Update On 2023-09-01 09:38 GMT
  • இரட்டை கொலை தொடர்பாக பீகாரை சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரபுநாத் சிங் கைது செய்யப்பட்டார்.
  • தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.

புதுடெல்லி:

பீகார் மாநிலம் சரண் மாவட்டம் சாப்ரா பகுதியில் கடந்த 1995-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது 2 பேர் கொல்லப்பட்டனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக பீகாரை சேர்ந்த முன்னாள் எம்.பி. பிரபுநாத் சிங் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இரட்டை கொலை வழக்கில் பிரபுநாத் சிங்கிற்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள்.

Tags:    

Similar News