இந்தியா
null

புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

Published On 2022-12-29 10:45 IST   |   Update On 2022-12-29 13:52:00 IST
  • இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.
  • டைம் ஸ்லாட் டோக்கன் பெறாத இலலச தரிசன பக்தர்கள் அங்குள்ள குடோன்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் தொடர் மழை மற்றும் கடும் பனி காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

தற்போது மழை இல்லாமல் குளிரின் தாக்கமும் குறைந்து உள்ளதால் மீண்டும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மேலும் ஆங்கில புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி நெருங்கி வருவதாலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

இலவச தரிசன டைம் ஸ்லாட் டோக்கன் பெற்ற பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சென்றால் சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர்.

டைம் ஸ்லாட் டோக்கன் பெறாத இலலச தரிசன பக்தர்கள் அங்குள்ள குடோன்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் சுமார் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 71, 299 பேர் தரிசனம் செய்தனர். 28,288 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News