இந்தியா
சிவலிங்கத்தை சுற்றியபடி படமெடுத்து ஆடிய பாம்பு
- சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாம்பை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர்.
- கடந்த 4 நாட்களாக கோவில் வளாகத்தில் நாகப்பாம்பு உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஹுசூராபாத் நகரில் உள்ள ராமர் கோவிலில் நாகப்பாம்பு ஒன்று புகுந்தது. கோவிலில் உள்ள சிவன் சன்னதிக்குள் நுழைந்தது. அங்கிருந்த சிவலிங்கத்தை சுற்றி சுற்றி வந்தது.
மேலும் சிவலிங்கத்தின் மீது உடலை சுற்றியபடி படமெடுத்து ஆடியது. இது பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கோவிலில் நாகப்பாம்பு இருப்பதாக தகவல் பரவியதையடுத்து, பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாம்பை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர்.
சிவலிங்கம் மீது நாகப்பாம்பு கண்டதால், சிவன் கோவிலில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்
அவர்களில் சிலர் பூஜை செய்து வழிபட்டனர். பாம்பின் காட்சிகளை தங்கள் செல்போனில் படம் பிடித்தனர். கடந்த 4 நாட்களாக கோவில் வளாகத்தில் நாகப்பாம்பு உள்ளது. இதனால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.