இந்தியா

திருப்பதி விடுதியில் சென்னை பக்தர் தற்கொலை

Published On 2023-08-22 10:10 IST   |   Update On 2023-08-22 10:10:00 IST
  • அருண் கணேஷ் விடுதி அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் கணேஷ் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பதி:

சென்னையை சேர்ந்தவர் அருண் கணேஷ் (வயது 41). இவர் கடந்த சனிக்கிழமை திருப்பதிக்கு வந்தார். திருப்பதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

நேற்று முன்தினம் உறவினர்கள் வருவதாக கூறி சாதாரண அறையில் இருந்து ஏசி அறைக்கு மாறினார்.

நேற்று முழுவதும் அருண் கணேஷ் விடுதி அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது அருண் கணேஷ் தூக்கில் பிணமாக தொங்கினார். போலீசார் அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அருண் கணேஷ் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News