இந்தியா

மணக்கோலத்தில் குட்கா போட்ட மணப்பெண்

Published On 2023-06-02 05:32 GMT   |   Update On 2023-06-02 05:32 GMT
  • உலக சாதனைக்காக நடத்தப்பட்ட விழாவில் 2,222 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
  • திருமணம் முடிந்ததும் மணமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் பராம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் விழா கடந்த 26-ந்தேதி நடந்தது.

உலக சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த விழாவில் 2,222 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடிந்ததும் மணமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர். அப்போது ஒரு மணப்பெண் தனது கணவர் பையில் மறைத்து வைத்திருந்த குட்காவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். யாரும் பார்க்கவில்லை என அந்த மணப்பெண் நினைத்துள்ளார்.

ஆனால் விழாவை பதிவு செய்த கேமிராவில் இந்த காட்சி பதிவானது. மணக்கோலத்தில் புதுப்பெண் குட்கா போடும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News