ஆந்திராவில் மதுக்கடையில் தகராறு: மதுக்கடைக்கு தீ வைத்தவர் கைது
- கடையை அடைக்கும் நேரம் என்பதால் அவருக்கு மதுபானம் தர ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
- தீ வைத்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாகப்பட்டினம்:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மதுர்வாடா பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு வந்த ஒருவர் அங்கிருந்த ஊழியரிடம் மதுபானம் கேட்டு உள்ளார். கடையை அடைக்கும் நேரம் என்பதால் அவருக்கு மதுபானம் தர ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் அவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆத்திரத்துடன் அங்கிருந்து சென்ற அந்த நபர் ஒரு பெட்ரோல் கேனுடன் மீண்டும் மதுபானக் கடைக்கு வந்தார். கடையின் உள்ளேயும் ஊழியர்கள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக கடையை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். ஆனால் கடை முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கணினி உள்பட ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தீ வைத்த நபரை போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.