இந்தியா

டியூசன் சென்ற மாணவியை 7 மாதமாக பலாத்காரம் செய்த ஆசிரியர்- தேர்வில் தோல்வியடைந்ததால் வெளிப்பட்ட உண்மை

Published On 2022-07-02 05:38 GMT   |   Update On 2022-07-02 05:38 GMT
  • மாணவியிடம் அபிராமி ரெட்டி உன்னை 10-ம் வகுப்பில் தேர்ச்சி அடைய வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருக்கமாக பழகி வந்தார்.
  • அவரிடம் டியூசன் படிக்கும் மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு சிறுமியிடம் சிறப்பு வகுப்பு நடத்துகிறேன் எனக்கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டார்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம் ராய்சோட்டி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் அபிராம ரெட்டி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அபிராம ரெட்டி ஒரு வீட்டை வாடகை எடுத்து அப்பகுதி மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார். அபிராம ரெட்டியிடம் 10-ம் வகுப்பு மாணவி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு டியூசன் சேர்ந்தார்.

அப்போது மாணவியிடம் அபிராமி ரெட்டி உன்னை 10-ம் வகுப்பில் தேர்ச்சி அடைய வைக்கிறேன் என ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் நெருக்கமாக பழகி வந்தார்.

அவரிடம் டியூசன் படிக்கும் மாணவர்கள் வீட்டிற்கு சென்ற பிறகு சிறுமியிடம் சிறப்பு வகுப்பு நடத்துகிறேன் எனக்கூறி சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

தொடர்ந்து 7 மாதங்களாக ஆசிரியர் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டார்.

இதுகுறித்து வெளியில் யாரிடமாவது கூறினால் 10-ம் வகுப்பு தேர்வில் பெயில் ஆக்கி விடுவதாக மிரட்டினார். இதனால் பயந்துபோன மாணவி இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறாமல் இருந்தார்.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இதில் மாணவி 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை.

இதுகுறித்து சிறுமியிடம் அவரது பெற்றோர்கள் கேட்டபோது, டியூசன் நடத்தும் ஆசிரியர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறியதால் சரிவர படிக்கவில்லை என்றும் அவர் தொடர்ந்து பாலியில் தொல்லை கொடுத்ததால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் ராய்ச்சோட்டி போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர்ரெட்டி வழக்கு பதிவு செய்து அபிராமரெட்டியை போக்சோ சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைத்தார்.

Tags:    

Similar News