இந்தியா

கிராமின் வங்கியில் ரூ.49 லட்சம் அபேஸ்- கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை

Published On 2022-09-06 08:09 GMT   |   Update On 2022-09-06 08:09 GMT
  • வங்கியில் இருந்து ரூ.27 லட்சம் ரொக்கமும், ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களும் கொள்ளை.
  • கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம்.

மகாராஷ்டிரா மாநிலம் லதூரில் உள்ள பஞ்சாயத்து கட்டிடத்தில் மகாராஷ்டிரா கிராமின் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுமார் 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் கணக்கு வைத்து சேமித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் வங்கிக்கு வந்த பணியாளர்கள், முகப்பு வாயில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வங்கி முழுவதும் சோதனையிட்டனர். அப்போது, வங்கியில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போலீஸ் ஆய்வாளர் ராமேஷ்வர் தத் கூறியதாவது:-

வங்கியின் முகப்பு வாயில் கதவு 5 வகையான லாக்கர் கொண்டது. இந்த லாக்கரை தொழில் ரீதியாகவும், நுணுக்கமாகவும் உடைத்துள்ளனர். மேலும், வங்கி இருக்கும் கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன. கட்டிட ஜன்னலில் இரும்பு கம்பி இல்லாததால் கொள்ளையார்கள் எளிதாக நுழைந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் வங்கியில் இருந்து ரூ.27 லட்சம் ரொக்கமும், ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

கொள்ளை சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News