இந்தியா

மணிப்பூரில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2023-02-04 03:38 GMT   |   Update On 2023-02-04 03:38 GMT
  • நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்து பாதுகாப்பிற்காக வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
  • நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்து பாதுகாப்பிற்காக வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.

இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் மற்றும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

Tags:    

Similar News