இந்தியா
மகாராஷ்டிராவில் பஸ் மீது லாரி மோதி 4 பேர் பலி
- தானேயில் உள்ள சதாரா பகுதியில் இருந்து டோம்பிவிலி பகுதிக்கு தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்றது.
- விபத்தில் பஸ்சில் இருந்த 3 பயணிகள், லாரி டிரைவர் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
போபால்:
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள சதாரா பகுதியில் இருந்து டோம்பிவிலி பகுதிக்கு தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்றது.
இன்று அதிகாலை 2 மணியளவில் மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுவாமி நாராயண் கோவில் அருகே பஸ் சென்றபோது, பின்னால் வந்த லாரி பஸ் மீது மோதியது.
இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 3 பயணிகள், லாரி டிரைவர் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 18 பயணிள் காயம் அடைந்தனர்.