இந்தியா

மகாராஷ்டிராவில் பஸ் மீது லாரி மோதி 4 பேர் பலி

Published On 2023-04-23 12:11 IST   |   Update On 2023-04-23 12:11:00 IST
  • தானேயில் உள்ள சதாரா பகுதியில் இருந்து டோம்பிவிலி பகுதிக்கு தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்றது.
  • விபத்தில் பஸ்சில் இருந்த 3 பயணிகள், லாரி டிரைவர் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

போபால்:

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள சதாரா பகுதியில் இருந்து டோம்பிவிலி பகுதிக்கு தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்றது.

இன்று அதிகாலை 2 மணியளவில் மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுவாமி நாராயண் கோவில் அருகே பஸ் சென்றபோது, பின்னால் வந்த லாரி பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 3 பயணிகள், லாரி டிரைவர் ஆகிய 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் பஸ்சில் பயணம் செய்த 18 பயணிள் காயம் அடைந்தனர்.

Tags:    

Similar News