இந்தியா

சித்தூர் அருகே 20 யானை கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம்

Published On 2023-03-01 11:28 IST   |   Update On 2023-03-01 11:28:00 IST
  • விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த முட்டைக்கோஸை மிதித்து நாசப்படுத்தியது.
  • யானைகள் கூட்டமாக பிளிறியபடி சென்றதால் மக்கள் அச்சமடைந்து வீட்டிலேயே முடங்கினர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரில் உள்ள கொளம சானப்பள்ளி ஊராட்சி, கீழ மருமூர், கல்லாடு கிராமம் அருகே உள்ள விவசாய நிலங்களில் நேற்று அதிகாலை 20 யானைகள் கொண்ட கூட்டம் திடீரென விவசாய நிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்தன.

இதில் வேணுகோபால் ரெட்டி என்பவரின் வாழை தோட்டத்திற்கு புகுந்து வாழை மரங்களை முறித்து சேதப்படுத்தின, மேலும் அருகில் இருந்த தென்னந் தோப்புக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை மரங்களை பிடுங்கி எறிந்தன.

விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த முட்டைக்கோஸை மிதித்து நாசப்படுத்தியது. பயிர்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக பரிக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குழாய்களை துவம்சம் செய்தன.

யானைகள் கூட்டமாக பிளிறியபடி சென்றதால் மக்கள் அச்சமடைந்து வீட்டிலேயே முடங்கினர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாய பெயர்களை யானை கூட்டம் நாசம் செய்து விட்டு மீண்டும் வனப்பகுதிக்கு சென்றது. யானைகள் சேதப்படுத்திய விவசாய பயிர்களுக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.

மேலும் யானைகள் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகாதவாறு தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News