இந்தியா

லிப்ட் கொடுப்பதாக கூறி 17 வயது சிறுமியை காரில் கடத்தி கற்பழித்த வாலிபர்கள்

Published On 2023-01-26 10:13 IST   |   Update On 2023-01-26 10:13:00 IST
  • ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்த சென்ற வாலிபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர்.
  • புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்களை கைது செய்தனர்.

நாக்பூர்:

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் சயோனர் என்ற பகுதி உள்ளது. சம்பவத்தன்று இப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக காரில் வந்த 2 வாலிபர்கள் அந்த சிறுமிக்கு 'லிப்ட்' கொடுப்பதாக கூறி காரில் அழைத்துள்ளனர். அதை நம்பி சிறுமி காரில் ஏறினார்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சிறுமியை அழைத்த சென்ற வாலிபர்கள் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர்களை கைது செய்தனர்.

Tags:    

Similar News