இந்தியா
மந்திரி சபையில் பெண்களுக்கு இடமில்லாதது அதிர்ச்சி அளிக்கிறது: சுப்ரியா சுலே கண்டனம்
- நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர்.
- இந்த முடிவு அவர்கள் பெண்களை மதிப்பது இல்லை என்பதை காட்டுகிறது.
மும்பை :
மராட்டியத்தில் நேற்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. 18 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஒரு பெண்ணுக்கு கூட மந்திரி சபையில் இடம் கொடுக்கப்படவில்லை. இதை தேசியவாத காங்கிரசை சேர்ந்த சுப்ரியா சுலே எம்.பி. விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "மந்திரி சபையில் ஒரு பெண்ணுக்கு கூட இடம் வழங்கப்படாதது துரதிருஷ்டமானது. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். ஒரு பெண்ணுக்கு கூட மந்திரி சபையில் இடம் கிடைக்காது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இந்த முடிவு அவர்கள் பெண்களை மதிப்பது இல்லை என்பதை காட்டுகிறது" என்றார்.
இந்த விவகாரத்தில் சுப்ரியா சுலே, அவரை சில மாதங்களுக்கு சமையல் அறைக்கு சென்று சமைக்க வேண்டும் என கூறிய பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலையும் மறைமுக விமர்சித்தார்.