இந்தியா

அரிசி ஆலையில் திடீர் புகை.. மயங்கி விழுந்த தொழிலாளர்கள் - 5 பேர் உயிரிழப்பு

Published On 2025-04-25 11:28 IST   |   Update On 2025-04-25 11:28:00 IST
  • உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
  • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் உள்ள அரிசி ஆலையில், உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இன்று காலை ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் சிலர், உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு அதை ஆய்வு செய்ய சென்றனர்.

புகை மிகவும் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்தில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் மயக்கமடைந்தனர். தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஐந்து தொழிலாளர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மூன்று தொழிலாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

Tags:    

Similar News