இந்தியா

அசாம், டெல்லி, அந்தமானில் திடீர் நிலநடுக்கம்

Published On 2023-05-29 08:32 GMT   |   Update On 2023-05-29 08:32 GMT
  • அந்தமான் நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும், டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

கவுகாத்தி:

அசாம் மாநிலம் சோனித்பூர் பகுதியில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 அக பதிவானது. இன்று காலை 8 மணியளவில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது. 15 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

இதேபோல் அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று காலை 7.48 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. டிக்லிபூருக்கு கிழக்கே 137 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் மற்றும் பூஞ்ச் பகுதிகளிலும், டெல்லி என்.சி.ஆர். பகுதியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.

Tags:    

Similar News