இந்தியா

மாணவர் சேர்க்கை: மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்

Published On 2024-02-23 04:47 GMT   |   Update On 2024-02-23 06:27 GMT
  • நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5ம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.
  • முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமெனில் 6 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.

புதுடெல்லி:

வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளிகளில் தொடங்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிக்கை அனுப்பி உள்ளது. அதில்,

* புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் கடந்த ஆண்டு 2ம் வகுப்பு வரை பாடத்திட்டம் அமலுக்கு வந்தது.

* நடப்பு கல்வியாண்டில் 3, 4, 5ம் வகுப்புகளுக்கும் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமலுக்கு வருகிறது.

* ப்ரீ கேஜிக்கு 3 வயதும், எல்கேஜிக்கு 4 வயதும், யுகேஜிக்கு 5 வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும்.

* முதல் வகுப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டுமெனில் 6 வயது பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News