இந்தியா

பிரியங்காவுடன் சோனியா இமாச்சல பிரதேசம் பயணம்

Published On 2023-05-13 11:40 IST   |   Update On 2023-05-13 11:40:00 IST
  • இருவரையும் இமாச்சல பிரதேச மாநில முதல்வா் சுக்விந்தா் சிங் வரவேற்றாா்.
  • இருவருக்கும் நினைவுப் பரிசாக பாரம்பரிய இசைக்கருவிகளை வழங்கினாா்.

புதுடெல்லி:

காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, அவரது மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோா், இமாசல பிரதேசத்துக்கு நேற்று தனிப்பட்ட முறையில் பயணம் மேற்கொண்டனர்.

சிம்லாவின் சாப்ரா பகுதிக்கு ஹெலிகாப்டா் மூலம் வந்திறங்கிய அவா்களை இமாச்சல பிரதேச மாநில முதல்வா் சுக்விந்தா் சிங் வரவேற்றாா். இருவருக்கும் நினைவுப் பரிசாக பாரம்பரிய இசைக்கருவிகளை அவா் வழங்கினாா்.

பின்னா், சாப்ரா பகுதியில் உள்ள வத்ராவின் இல்லத்துக்கு இருவரும் சென்றனா். ஜனாதிபதியின் கோடைகால பயண மாளிகைக்கு அருகே இந்த இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லம் ஆங்கில மற்றும் மலைப்பகுதி கட்டுமான கலைகளின் கலவையாக அமைந்துள்ளது. அடா்ந்த ஊசியிலை காடுகளுக்கு இடையே அமைதியான சூழலில் இது அமைந்துள்ளது.

Tags:    

Similar News