இந்தியா

வீட்டிற்கு வந்தும் உடல்நிலை சரியில்லாத மனைவி பார்க்க முடியாமல் மீண்டும் சிறைக்கு திரும்பிய சிசோடியா

Published On 2023-06-03 15:53 GMT   |   Update On 2023-06-03 15:53 GMT
  • மதுபான முறைகேடு வழக்கில் சிபிஐ கைது செய்துள்ளது
  • 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் கேட்டு சிசோடியா மனு தாக்கல்

டெல்லி மாநில மந்திரியாக இருந்தவர் மணிஷ் சிசோடியா. இவரை கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சிபிஐ மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்தது. அமலாக்கத்துறையும் அவரை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது மனைவிக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தில் அவரை பார்கக் அனுமதி கேட்டு இன்று ஒருநாள் மட்டும் பிணை பெற்றார். காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நீதிமன்றம் அவருக்கு அனுமதி அளித்தது.

இதனால் இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மணிஷ் சிசோடியா அவரது வீட்டிற்கு சென்று உடல்நிலை சரியில்லாத மனைவியை பார்க்க விரைந்தார். அதற்குள் அவரது மனைவி உடல்நிலம் மிகவும் மோசமடைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இதனால் வீட்டிற்கு வந்தடைந்த மணிஷ் சிசோடியோவால் தனது மனைவியை பார்க்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் மீண்டும் சிறைக்குத் திரும்பினார்.

இதற்கிடையே 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், மருத்துவமனை அவரது மனைவி உடல்நிலை குறித்து அறிக்கை அளிக்கும்படி நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags:    

Similar News