இந்தியா

உலக அளவில் அங்கீகாரம்: இந்திய பீர் வகையான சிம்பாவுக்கு சிறந்த சுவைக்கான விருது

Published On 2025-08-30 13:45 IST   |   Update On 2025-08-30 13:45:00 IST
  • சிம்பா பீர் பல்வேறு வகைகளுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது.
  • வெண்கல பதக்க விருது பெற்ற சிம்பா ஸ்டவுட் சற்று கசப்பான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது.

புதுடெல்லி:

மதுபான உற்பத்தியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் உள்ளிட்ட குழு உலகில் சிறந்த பீர் வகைகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. முதலிடம் பிடிக்கும் பீர் வகைகளுக்கு தங்க பதக்கமும், 2- வது வகைக்கு வெள்ளி பதக்கமும், 3-வது இடம் பிடிக்கும் பீருக்கு வெண்கல பதக்கம் போன்ற விருதுகள் வழங்கப்படுகிறது.

அதன் அடிப்படையில் 2025-ம் ஆண்டில் உலக பீர் வகைகளில் இந்தியாவில் தயாரிக்கப்படும் சிம்பா பீருக்கு சிறந்த சுவைக்கான விருது கிடைத்துள்ளது.



சிம்பா பீர் பல்வேறு வகைகளுடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது. இதன் தயாரிப்பான சிம்பா விட்டிற்கு வெள்ளி பதக்க விருதும், சிம்பா ஸ்டவுட் பீர் வகை வெண்கல பதக்க விருதும் பெற்றுள்ளது.

இதில் சிம்பா விட் பெல்ஜியம் விட் பாணியில் தயாரிக்கப்படுகிறது. மிக குறைந்த கசப்பு தன்மையுடன் ஆரஞ்சு தோல், கொத்தமல்லி, கோதுமை மால்ட் உள்ளிட்டவைகள் அடங்கிய பொருட்களும் சிறந்த நறுமணம் மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இந்த பீர் வகைகள் தயாரிக்கப்படுகிறது.

வெண்கல பதக்க விருது பெற்ற சிம்பா ஸ்டவுட் சற்று கசப்பான சுவையுடன் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுகள் கிடைத்ததன் மூலம் இந்தியாவில் மதுபான துறை வளர்ச்சி அடைந்துள்ளதை காட்டுகிறது. உலக அளவிலும் இந்திய தயாரிப்புக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.

Tags:    

Similar News