கூட்டத்தில் கலந்து கொண்ட உத்தவ் தாக்கரே அணி தலைவர்களை படத்தில் காணலாம்.
சிவசேனா பீனிக்ஸ் பறவை போல எழுச்சி பெறும்: உத்தவ் அணி எம்.எல்.ஏ. பேச்சு
- உத்தவ் தாக்கரே அணி சார்பில் மகாபிரபோதன் யாத்திரை பொதுக்கூட்டம் நடந்தது.
- எதிரிகளும், துரோகிகளும் சிவசேனாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள்.
தானே :
சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 2 ஆக உடைந்து உள்ளது. 2 தரப்பும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறிவருகின்றனா். எனவே இருதரப்பும் தங்கள் அணியை பலப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் உத்தவ் தாக்கரே அணி சார்பில் தானேயில் 'மகாபிரபோதன் யாத்திரை' பொதுக்கூட்டம் நடந்தது.
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதிக்கம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த ராஜன் விச்சாரே எம்.பி., பாஸ்கர் ஜாதவ் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பாஸ்கர் ஜாதவ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
இறக்கங்களை சந்தித்து உள்ளது. எனவே இதுவும் கடந்து போகும். சிவசேனா பீனிக்ஸ் பறவை போல எழுச்சி பெறும். தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டேவின் நாற்காலியை பறிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இந்துக்களின் வரலாறில் எவரும் தந்தை, சகோதரனிடம் இருந்து ஆட்சியை பறித்தது இல்லை. முகாலய ஆட்சியில் தான் அதுபோல நடந்தது''.
இவ்வாறு அவர் பேசினார்.
விநாயக் ராவத் எம்.பி. பேசுகையில், " எதிரிகளும், துரோகிகளும் சிவசேனாவை அழிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது நடக்காது. சிவசேனா முழு பலத்துடன் எழுச்சி பெறும்." என்றார்.
இதேபோல உத்தவ் அணி துைண தலைவர் சுஷ்மா அந்தாரே ஏக்நாத் ஷிண்டே, பா.ஜனதாவின் கைப்பாவை என கடுமையாக விமர்சித்தார்.