இந்தியா

ஒருமுறை கூட மணிப்பூர் செல்லாத பிரதமர் 10 முறை மகாராஷ்டிரா வருவது ஏன்?: சஞ்சய் ராவத்

Published On 2024-01-19 05:42 GMT   |   Update On 2024-01-19 05:42 GMT
  • மகாராஷ்டிரா அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்களால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வாங்க முடியாது.
  • எனவே பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் மகாராஷ்டிரா வருகிறார் என்றார் சஞ்சய் ராவத்.

மும்பை:

உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் மகாராஷ்டிராவுக்கு வருகிறார். அவர் மகாராஷ்டிராவை அவ்வளவு நேசிக்கிறார் என்பதால் அல்ல.

உத்தர பிரதேசத்திற்கு பிரதமர் செல்வது உ.பி.யை நேசிப்பதால் அல்ல. உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தொகுதிகள் அதிகம். அதற்குப் பிறகு மகாராஷ்டிரா. வரும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா முக்கியப் பங்கு வகிக்கும்.

இங்குள்ள அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்களால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வாங்க முடியாது.

கடந்த 13 மாதங்களில் 8 முதல் 10 முறை இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஏன் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார்.

Tags:    

Similar News