இந்தியா

பட்ஜெட் 2024 - விக்சித் பாரத் திட்டம்

Published On 2024-02-01 06:34 GMT   |   Update On 2024-02-01 11:27 GMT
  • 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார்
  • புதிய அரசு பொறுப்பேற்றதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

இவ்வருடம் ஏப்ரல்-மே மாதத்தில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் 2024க்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

நிதியமைச்சரின் பட்ஜெட் உரையின் சிறப்பம்சங்கள்:

விக்சித் பாரத் திட்டத்தை செயல்படுத்த பல புதுமைகளும் மாற்றங்களும் அவசியப்படுகிறது.

விக்சித் பாரத் என்பது இந்தியா, அடுத்து வரும் தசாப்தங்களில் பொருளாதார ரீதியாக, சமூக மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உலகிலேயே முன்னிலையில் இருப்பதற்கு 75-வது குடியரசு தினத்திற்கான கருப்பொருள். இதில் மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புகள் அடங்கும்.

ஒவ்வொரு கால எல்லையில் விக்சித் பாரத் திட்டத்திற்கு மாநிலங்கள் தங்கள் இலக்குகளை எட்டுவதற்கு, ரூ.75 ஆயிரம் கோடிக்கான 50-வருட வட்டியில்லா கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News