இந்தியா

பட்ஜெட் கூட்டத்தொடரில் அனுமதி கேட்டு சோரன் மனு: டிஸ்மிஸ் செய்த கோர்ட்

Published On 2024-02-22 10:06 GMT   |   Update On 2024-02-22 10:06 GMT
  • பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதி கோரி ஹேமந்த் சோரன் மனு செய்தார்.
  • சோரனின் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட் இன்று உத்தரவிட்டது.

ராஞ்சி:

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முன்னாள் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் மீது நிலக்கரி சுரங்கம் மற்றும் நில மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடந்த பணமோசடி தொடர்பாக அமலாக்கத் துறையின் பிடியில் சிக்கினார்.

இவரது கோர்ட் காவல் பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் ராஞ்சி பி.எம்.எல். சிறப்பு கோர்ட் பிப்ரவரி 22-ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டது.

இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி ஹேமந்த் சோரன் கோர்ட்டில் மனு செய்தார்.

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த ஐகோர்ட் சோரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags:    

Similar News