இந்தியா

அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு தைரியம் இல்லை: ராஜ்நாத் சிங்

Published On 2024-04-18 09:31 GMT   |   Update On 2024-04-18 09:31 GMT
  • கடந்த தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார்.
  • இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.

பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், பாதுகாப்புத்துறை மந்திரியுமான ராஜ்நாத் சிங் இன்று கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா வேட்பாளர் அனில் கே அந்தோணியை ஆதரித்து பேசினார்.

அப்போது "கடந்த முறை அமேதி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிட அவருக்கு தைரியம் இல்லை. அங்கு தோல்வியடைந்ததால் உத்தர பிரதேசத்தில் இருந்து கேரளாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். எனினும், வயநாடு மக்கள் இந்த முறை அவரை எம்.பி. தேர்ந்தெடுக்கமாட்டோம் என முடிவு செய்துள்ளார். இதை என்னால் கேட்க முடிகிறது" என்றார்.

நேற்று ராகுல் காந்தியிடம் மீண்டும் அமேதி தொகுதியில் போட்யிடுவீர்களா? என கேட்கப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-

அமேதி தொகுதி குறித்து கட்சி முடிவு எடுக்கும். கட்சியின் எந்த உத்தரவை நான் பெற்றாலும் அதற்கு கட்டுப்படுவேன். எங்களுடைய கட்சியில் இதுபோன்ற முடிவுகள் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில்தான் எடுக்கப்படும்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட்டு வந்தார். தற்போது உடல்நலத்தை கருத்தில் கொண்டு மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனால் ரேபரேலி தொகுதியில் பிரியங்காவின் கணவர் வதேரா போட்டியிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரண்டு தொகுதிகளிலும் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் போட்டியிட வேண்டும் என உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளுக்கு காங்கிரஸ் இன்னும் வேட்பாளர் அறிவிக்காமல் உள்ளது.

Tags:    

Similar News