இந்தியா

மருத்துவ சிகிச்சைக்குப் பின் பிரியங்கா காந்தி 'டிஸ்சார்ஜ்'

Published On 2024-02-19 14:21 GMT   |   Update On 2024-02-19 14:21 GMT
  • டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதி.
  • பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வயிற்று தொற்று காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு பிரியங்கா காந்தி 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட தகவல் உறுதியானது.

கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக உத்தரபிரதேசத்தில் நடைபெறும் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் தன்னால் பங்கேற்க முடியவில்லை.

துரதிர்ஷ்டவசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். நான் குணமடைந்தவுடன் அங்கு வருவேன். உ.பி.யில் மக்கள், எனது நண்பர்கள் அனைவருக்கும் நியாய யாத்திரை வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பிரியங்கா காந்தி 'எக்ஸ்' இணைய தளத்தில் பிரியங்காகாந்தி பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News