2 நாள் பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் பிரதமர் மோடி
- பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளையும் விவாதிக்கிறார்கள்.
- இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இருக்கும்.
15-வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று இரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு டோக்கியோ சென்றடைந்தார். இந்த பயணம் பிரதமர் மோடியின் 8-வது ஜப்பான் பயணம் ஆகும். அவர் கலந்து கொள்ளும் உச்சி மாநாடு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவுடன் நடைபெறும் முதல் உச்சி மாநாடு ஆகும்.
இந்த மாநாட்டில் இரு நாட்டு பிரதமர்களும் இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டாண்மை, பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதாரம், தொழில்நுட்பம் மற்றும் புதுமை, மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்கிறார்கள்.
மேலும், பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளையும் விவாதிக்கிறார்கள். இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக இருக்கும்.
பிரதமர் மோடி, தனது பயணத்தின் 2-வது கட்டமாக, சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், 31-ந் தேதியும், செப்டம்பர் 1- ந் தேதியும் சீனாவில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், பல நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.