இந்தியா

பீகாரில் தொழிற்சாலைகள் இல்லையே ஏன்?: பிரதமரை சாடிய பிரசாந்த் கிஷோர்

Published On 2025-09-16 18:22 IST   |   Update On 2025-09-16 18:22:00 IST
  • பிரதமர் மோடி பீகார் வரும்போது ​​ராகுல் காந்தியை திட்டுவார்.
  • காங்கிரசின் ராகுல் காந்தி பீகாரில் பிரதமர் மோடியை திட்டுவார்.

பாட்னா:

பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும்

தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடி பீகார் வரும்போது, ராகுல் காந்தியை திட்டுவார். ராகுல் காந்தி பிரதமர் மோடியை திட்டுவார்.

பீகாரில் இருந்து இடம்பெயர்வு எப்படி நிறுத்தப்படும் என்பது பற்றி இரு தலைவர்களும் பேசவில்லை.

பீகார் மக்கள் வெள்ளத்தில் இருந்து எப்படி நிவாரணம் பெறுவார்கள் என்பது பற்றி இருவருமே பேசவில்லை.

பீகாரில் தொழிற்சாலைகள் இல்லாததற்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News