இந்தியா

போஸ்ட் ஆபீசில் UPI வசதி... டிஜிட்டல் மயமாகும் தபால் நிலையங்கள்

Published On 2025-06-28 11:37 IST   |   Update On 2025-06-28 11:37:00 IST
  • அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.
  • இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்தியாவில் தற்போது பெட்டிக்கடை தொடங்கி பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன.

ஆனால் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் அஞ்சல் அலுவலகங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் போஸ்ட் ஆபீசில் UPI மூலம் பணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

முன்னதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்த தபால் நிலையங்களில் QR குறியீடு அறிமுகப்படுத்தியது. ஆனால் தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் வாடிக்கையாளர் புகார்கள் காரணமாக, இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. தற்போது நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்து மீண்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வரவுள்ளது. 

Tags:    

Similar News