அசாமில் வெள்ளத்திற்குள் மூழ்கிய காவல் நிலையம்
- 24 லட்சத்துக்கும் அதிகமான அசாம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- சில மாவட்டங்களில் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அசாம் மாநிலத்தில் காவல் நிலையம் ஒன்று ஆற்றுக்குள் மூழ்கியது குறித்த வீடீயோ வெளியாகி உள்ளது.
நல்பாரி மாவட்டத்தில் இரண்டு அடுக்குமாடி கொண்ட காவல்நிலையத்தை சுற்றி வெள்ளநீர் அதிகரித்து வந்த நிலையில், அரிப்பு காரணமாக அந்த கட்டிடம் இடிந்து விழுந்து ஆற்றுக்குள் மூழ்கியது. இதை அங்கிருந்த கிராம மக்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். அந்த காவல்நிலைய கட்டிடம் நீண்ட நாட்களாக காலியாக இருப்பதால் உயிரிழப்பு ஏதுவும் ஏற்படவில்லை.
#WATCH | A part of the two-storied building of Bhangnamari police station sinks due to flood in Assam's Nalbari district
— ANI (@ANI) June 28, 2022
(Source: Unverified) pic.twitter.com/CMHpcgpHmN
பிரம்மபுத்திரா ஆற்றின் அருகே அமைந்துள்ள பல பகுதிகளில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ள நிலையில், கச்சார், கரீம்கஞ்ச் மற்றும் ஹைலகண்டி மாவட்டங்க ளில் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
28 மாவட்டங்களில் 24 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கச்சார் மாவட்டத்தில் உள்ள சில்சார் நகரம் உள்ளிட்ட பல பகுதிகள் ஒரு வாரத்திற்கும் மேலாக நீரில் மூழ்கியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 பேர் வெள்ள பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.