ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு..!
- இந்திய துணைக் குடியரசு தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் நேற்று ராஜினாமா செய்தார்.
- அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
குடியரசு துணைத் தலைவரான ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். ராஜினாமா தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்முக்கு கடிதம் எழுதியுள்ளார். குடியரசு துணைத் தலைவர் மாநிலங்களவை தலைவராக செயல்படக் கூடியவர். இதனால் மாநிலங்களவை தலைவர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில் நமது நாட்டிற்கு சேவை செய்ய ஜெகதீப் தன்கர் பல வாய்ப்புகளை பெற்றுள்ளார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.