இந்தியா

பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயார்: பிரதமர் மோடி

Published On 2024-03-16 11:44 GMT   |   Update On 2024-03-16 11:44 GMT
  • பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
  • முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறும். முதல் கட்டமாக தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறும்.

மேலும் 4 மாநில சட்டசபை தேர்தல்களை நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி, சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேசம் மாநில சட்டசபை தேர்தல்களை ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா இங்கே. 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி உள்ளோம். நல்லாட்சி மற்றும் துறைகள் முழுவதும் சேவை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் மக்களிடம் செல்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News