இந்தியா

வீடியோ கான்பரன்ஸ் மூலம் கெஜ்ரிவால் அமைச்சர்களுடன் உரையாட அனுமதிக்க வேண்டும்: நீதிமன்றத்தில் மனு

Published On 2024-04-17 11:54 GMT   |   Update On 2024-04-17 11:54 GMT
  • கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
  • வருகிற 23-ந்தேதி வரை கெஜ்ராவலுக்கு நீதிமன்றம் காவல் அளிக்கப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 15-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில், அவரின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 23-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற காவல் மூலமாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துவிட்டார். அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் நீதிமன்றம் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது. மேலும், இது போன்று மனுக்கள் தாக்கல் செய்யக் கூடாது எனத் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் திறமையான டெல்லி அரசை நடத்த ஜெயிலில் இருந்து அரவிந்த கெஜ்ரிவால் டெல்லி மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கேபினட் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்த அனுமதிக்க வேண்டும் என சிறைத்துறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்ற மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பான தவறான, பரபரப்பான தலைப்புகளை ஊடகங்கள் ஒளிபரப்புவதைத் தடுக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு உத்தரவிடவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்தியாவின் அரசமைப்பு அல்லது எந்தவொரு சட்டமும் முதல் மந்திரிகள், பிரதமர் மந்திரிகள் உள்ளிட்ட மந்திரிகள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்த நடத்த தடைவிதிக்கவில்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News