இந்தியா
ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B. பாலாஜி நியமனம்
- புதிய CEO-வாக பாலாஜி தேர்வு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.
- பாலாஜி தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக பதவி வகித்து வருகிறார்.
டாடா குழுமம் வசமிருக்கும் பிரிட்டனைச் சேர்ந்த ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO-வாக தமிழரான P.B.பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் CEO-வாக அட்ரியன் மார்டெலின் பதவிக் காலம் வருகின்ற அக்டோபர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், புதிய CEO-வாக பாலாஜி தேர்வு நவம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக பதவியேற்க உள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த பாலாஜி, 2017 ஆம் ஆண்டு வரை ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். 2017 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழும தலைமை நிதி அதிகாரியாக பொறுப்பேற்றார். பாலாஜி தற்போது டாடா குழுமத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக (CFO) பதவி வகித்து வருகிறார்.