இந்தியா

பாராளுமன்ற சிறப்பு கூட்டம்- அனைத்து அலுவல்களிலும் பங்கேற்க எதிர்க்கட்சிகள் முடிவு

Published On 2023-09-18 11:03 IST   |   Update On 2023-09-18 11:03:00 IST
  • மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது.
  • மக்கள் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேச வேண்டும்

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் இன்று காலை இந்தியா கூட்டணியின் கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் அனைத்து அலுவல்களிலும் பங்கேற்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News