இந்தியா

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.80 லட்சத்தை இழந்த நர்சிங் மாணவர் தற்கொலை

Published On 2024-12-06 11:00 IST   |   Update On 2024-12-06 11:00:00 IST
  • சோம்நாத்சித்ரி ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை பணத்தை இழந்ததாக பெற்றோர் புகார் செய்தனர்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டம் பால்கி தாலுகா டோனகாபூர் கிராமத்தை சேர்ந்தவர் சோம்நாத்சித்ரி (23). இவர் கலபுரகி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதியாண்டு நர்சிங் படித்து வந்தார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட சோம்நாத் சித்ரி 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கடன் வாங்கி ஆன்லைனில் சூதாடினார்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 80 லட்சம் வரை இழந்த அவரிடம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். இதனால் விரக்தி அடைந்த அவர் தான் தங்கி இருந்த விடுதியில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தெரியவந்ததும் கலபுரகி நகர போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கலபுரகி போலீஸ் கமிஷனர் ஷரணப்பா கூறும் போது, சோம்நாத்சித்ரி ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை பணத்தை இழந்ததாக பெற்றோர் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

Tags:    

Similar News