இந்தியா

இப்போது 400 என்கிறார்கள், ஜூனில் 200 என்பார்கள் - பாஜகவை கலாய்த்த முன்னாள் தேர்தல் ஆணையர்

Published On 2024-04-08 14:59 GMT   |   Update On 2024-04-08 14:59 GMT
  • வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு - பிரதமர் மோடி
  • 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் - நிதிஷ்குமார்

வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்.

வரும் தேர்தலில், 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் என்று நேற்று நிதிஷ்குமார் பேசியது கிண்டலுக்கு உள்ளானது.

இந்நிலையில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் முழக்கம் தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில்,

"இப்போது 400 என்கிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆக குறையும். ஜூன் முதல் வாரத்தில் 175-லிருந்து 200 என்றளவில் இருக்கும். நான் அல்போன்சா மாம்பழத்தின் விலையை குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு செய்தியும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டியதில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News