அனைத்து காஷ்மீரி முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்ல - உமர் அப்துல்லா
- கார் குண்டுவெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி கார் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.
'டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்' என்றும் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை கண்டித்து பேசிய ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "அனைத்து ஜம்மு காஷ்மீர் மக்களும் பயங்கரவாதிகள் கிடையாது. சிலர் மட்டும் தான் இங்கு எப்போதும் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கெடுத்து வருகிறார்கள். ஜம்மு-காஷ்மீரின் ஒவ்வொரு மக்களையும், ஒவ்வொரு காஷ்மீர் முஸ்லிமையும் ஒரே சித்தாந்தத்துடன் பார்த்து, அவர்கள் ஒவ்வொருவரையும் பயங்கரவாதிகள் என்று நினைக்கும் போது, மக்களை சரியான பாதையில் கொண்டு செல்வது கடினம். மத்திய அரசின் பாதுகாப்பு குறைபாடு தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம்" என்று தெரிவித்தார்.