இந்தியா

புதிய வகை மாம்பழத்துக்கு ராஜ்நாத் சிங் பெயர்

Published On 2025-06-07 09:22 IST   |   Update On 2025-06-07 09:22:00 IST
  • ‘இந்தியாவின் மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.
  • இந்தியாவுக்கு அர்த்தமுள்ள வகையில் சேவை செய்தவர்களின் பெயர்களை எனது மாம்பழங்களுக்கு சூட்டுகிறேன்.

லக்னோ:

'இந்தியாவின் மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.

சிறுவயதில் இருந்தே மாம்பழ கலப்பினத்தில் பரிசோதனை செய்ய தொடங்கிய அவர் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

இந்நிலையில் அவர் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்குக்கு மரியாதை செலுத்தும் வகையில் 'ராஜ்நாத் ஆம்' என்ற புதிய வகை மாம்பழத்தை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இந்த புதிய வகை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் மாலிகாபாத்தில் உள்ள அவரது பழத்தோட்டத்தில் அவரது தனித்துவமான ஒட்டு நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

முன்னதாக மாம்பழ வகைகளுக்கு சச்சின் டெண்டுல்கர், ஐஸ்வர்யா ராய், அகிலேஷ் யாதவ், சோனியா காந்தி, நரேந்திர மோடி, அமித்ஷா போன்ற பிரமுகர்களின் பெயரை சூட்டிய கலிமுல்லா கான், தோட்டக்கலை மற்றும் பழ வளர்ப்பில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கலிமுல்லா கான் கூறுகையில், இந்தியாவுக்கு அர்த்தமுள்ள வகையில் சேவை செய்தவர்களின் பெயர்களை எனது மாம்பழங்களுக்கு சூட்டுகிறேன். இந்த பெயர்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

Tags:    

Similar News