இந்தியா

ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் அலட்சியம்.. இரத்தமாற்று சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு HIV பாதிப்பு

Published On 2025-10-26 10:38 IST   |   Update On 2025-10-26 10:38:00 IST
  • மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
  • இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்தனர்.

ஜார்கண்ட் அரசு மருத்துவமனையில் ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்ற 5 குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜார்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் சைபாசா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் தலசீமியா பாதித்த 5 குழந்தைகளுக்கும் ரத்தம் மாற்று சிகிச்சைகாக மருத்துவமனையின் ரத்த வங்கியிலிருந்து ரத்தம் ஏற்றப்பட்டது .

இந்நிலையில் அதில் ஒரு குழந்தையின் பெற்றோர், ரத்த வங்கியில் தங்கள் குழந்தைக்கு எச்ஐவி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டதால் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக நேற்று முன் தினம் குற்றம்சாட்டினர். புகாரைத் தொடர்ந்து, சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் குழு அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.

நேற்று அவர்கள் நடத்திய ஆய்வில், தலசீமியாவால் பாதிக்கப்பட்ட மேலும் நான்கு குழந்தைகளுக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் மொத்தம் 5 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு உறுதியானது.

தலசீமியா பாதித்த குழந்தைகளுக்கு மோசமான ரத்தம் செலுத்தப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் விசாரணையின்போது ரத்த வங்கியில் குறைபாடுகள் கண்டறியப்பட்டன என்றும் டாக்டர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தலசீமியா நோய்க்காக இந்தக் குழந்தைகள் அனைவரும் அதே மருத்துவமனையில் தொடர்ந்து ரத்த மாற்றுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அலட்சியத்தால் அவர்களுக்கு எச்ஐவி பாதித்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரத்த வங்கியின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News