இந்தியா

செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கவும்: நிதி மந்திரியிடம் வலியுறுத்திய கனிமொழி எம்.பி.

Published On 2025-05-22 02:27 IST   |   Update On 2025-05-22 02:27:00 IST
  • நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி சந்தித்தார்.
  • அப்போது செங்கல் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

புதுடெல்லி:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி சந்தித்தார்.

இதுதொடர்பாக கனிமொழி எம்.பி. எக்ஸ் வலைதளத்தில் கூறியுள்ளதாவது:

மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அப்போது செங்கல் மீதான ஜி.எஸ்.டி.யை அவசரமாகக் குறைக்கவும், ஐடிசி இல்லாமல் 3 சதவீதம் மற்றும் ஐடிசியுடன் 5 சதவீதம் ஆகியவற்றை முன்மொழியவும், பர்னர் பயன்பாட்டின் அடிப்படையில் கூட்டு வரியை அறிமுகப்படுத்தவும் கோரிக்கை விடுத்தேன்.

இதனால் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட செங்கல் அலகுகள் மற்றும் மில்லியன் கணக்கான கிராமப்புற வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News