இந்தியா

மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு

Published On 2023-12-11 11:35 GMT   |   Update On 2023-12-11 11:48 GMT
  • 4 மாநிலங்களில் கடந்த மாதம் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
  • வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற்றது.

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இதில், தெலுங்கானாவில் காங்கிரஸ், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவும் வெற்றி பெற்றது.

தெலுங்கானாவில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார். சத்தீஸ்கரில் முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்வானார்.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வாகியுள்ளார்.

தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்எல்ஏவாக தேர்வான மோகன் யாதவ் அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். கடந்த சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசில் மோகன் யாதவ், கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

Tags:    

Similar News