இந்தியா

மீனவர்கள் வலையில் சிக்கிய அதிசய `முள் தவளைகள்'

Published On 2025-04-08 10:34 IST   |   Update On 2025-04-08 10:34:00 IST
  • தவளைகளின் உடலில் உள்ள முட்கள் குத்தினால் கடுமையான வலி ஏற்படும்.
  • தவளைகளை பத்திரமாக கொண்டு சென்று நடுக்கடலில் விட்டனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று ருசி கொண்டா கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது அவர்களது வலையில் முட்களுடன் கூடிய தவளை கூட்டம் ஒன்று சிக்கியது. அதனை மீனவர்கள் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.


இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், பெரிய உயிரினங்கள் தங்களை தாக்கும் போது இந்த வகை தவளைகள் தங்களது உடலில் உள்ள முட்களை பயன்படுத்தி தங்களை தற்காத்துக் கொள்கின்றன.

இந்த தவளைகளின் உடலில் உள்ள முட்கள் குத்தினால் கடுமையான வலி ஏற்படும் என தெரிவித்தனர். பின்னர் தவளைகளை பத்திரமாக கொண்டு சென்று நடுக்கடலில் விட்டனர்.

Tags:    

Similar News