இந்தியா

மோடி  ஜெகன்மோகன் ரெட்டி   ரோஜா

பிரதமருடன் மோடியுடன் செல்பி எடுத்து கொண்டார் அமைச்சர் ரோஜா

Published On 2022-07-04 12:28 GMT   |   Update On 2022-07-04 14:22 GMT
  • ஆந்திர மாநில நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அல்லூரி சீதாராம ராஜூ சிலையை திறந்து வைத்தார்.
  • முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்பு

பீமாவரம்:

ஆந்திரப் பிரதேசத்தின் மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில ஆளுநர் பிஸ்வ பூசன் ஹரிசந்தன், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை மந்திரி கிஷன் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஒய். எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, நடிகை, ஆந்திர அமைச்சருமான ரோஜா, முன்னாள் மத்திய அமைச்சரும் திரைப்பட நடிகருமான சிரஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்து பிரதமர் மோடி அங்கிருந்து புறப்படும் போது அவருடன் ஆந்திர அமைச்சர் ரோஜா, செல்ஃபி எடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Tags:    

Similar News