இந்தியா

இந்தியாவில் 4 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்த கோடீஸ்வர குடும்பங்கள் - அறிக்கை சொல்லும் புள்ளிவிவரம்

Published On 2025-09-21 05:22 IST   |   Update On 2025-09-21 05:22:00 IST
  • இந்த குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ .40.5 லட்சம் கோடி ஆகும்.
  • இந்தியாவின் கோடீஸ்வர தலைநகரம் என்ற இடத்தை மும்பை தக்க வைத்துள்ளது.

இந்தியாவில் கோடீஸ்வர குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது.

Mercedes-Benz Hurun India Wealth Report 2025 வெளியிட்ட அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் இருந்த 4,58,000 ஆக இருந்த கோடீஸ்வர குடும்பங்கள் 2025 ஆம் ஆண்டில் 8,71,700 ஆக அதிகரித்துள்ளது. 

இந்த குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ .40.5 லட்சம் கோடி ஆகும்.

1 கோடியே 8.5 லட்சம் ரூபாய், அதற்கு மேல் நிகர மதிப்புள்ள குடும்பங்கள் கோடீஸ்வர குடும்பங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் கோடீஸ்வர தலைநகரம் என்ற இடத்தை மும்பை தக்க வைத்துள்ளது. இங்கு 1,42,000 கோடீஸ்வர குடும்பங்கள் உள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் டெல்லி (68,200) மற்றும் பெங்களூரு (31,600) உள்ளன.

மாநில அளவில், மகாராஷ்டிரா 1,78,600 கோடீஸ்வர குடும்பங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 72,600 குடும்பங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கோடீஸ்வரர்கள் பெரும்பாலும் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்கிறார்கள் என்று அறிக்கை தெரிவிக்கிறது. அவர்களின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு அமெரிக்கா முக்கிய இடமாக உள்ளது.

இந்த பணக்காரர்களில் 60% பேர் தங்கள் ஆண்டு செலவு ஒரு கோடி ரூபாய்க்குள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். 

Similar News